Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவரை தாண்டினா அவ்வளவுதான்! – அமெரிக்காவை மிரட்டும் மெக்ஸிகோ!

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (16:34 IST)
எந்த மெக்ஸிகர்கள் உள்ளே நுழையக் கூடாது என அமெரிக்கா சுவர் எழுப்பியதோ, அந்த சுவரே தற்போது அமெரிக்காவுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் மற்ற நாடுகளை விடவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். சீனா, இத்தாலி போன்ற நாடுகளை விடவும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனால் வரும் காலங்களில் அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவுக்கு அருகே உள்ள மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் அமெரிக்கா அளவுக்கு அதிகமாக இல்லாத சூழல் உள்ளது. இதனால் எல்லைப்பகுதியில் உள்ள சிலர் சட்ட விரோதமாக மெக்ஸிகோவுக்குள் நுழைவதாக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற போது அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதாக அறிவித்தார். பாதி கட்டியும் கட்டாமலும் உள்ள அந்த எல்லையை கடக்க முயன்று இதுவரை பல மெக்ஸிக மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது நிலைமை தலைகீழாக மாறி அமெரிக்கர்கள் மெக்ஸிகோவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments