Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் வரலாறு காணாத அரிசி தட்டுப்பாடு! என்ன காரணம்?

Prasanth Karthick
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:20 IST)

தீவு நாடான ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கம், புயல்களை சந்தித்து வரும் நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

 

 

ஜப்பானில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக பயிர் விளைச்சலில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் ஜப்பான் அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபோது எதிர்வரும் மாதங்களில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அதற்கு தயாராக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருந்தது.

 

இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் புகுந்த மக்கள் கிடைத்த உணவு பொருட்களை எல்லாம் வாங்கி வீடுகளில் சேர்த்துள்ளனர். அவ்வாறாக மக்கள் மொத்தமாக உணவு பொருட்களை வாங்கி சென்றதில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. 

 

அடுத்த மாத இறுதியில் பயிர் அறுவடைகள் நடைபெற உள்ளதால் அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என ஜப்பான் அரசு எதிர்பார்க்கிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments