Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இருந்து வரும் பழங்களை இறக்குமதி செய்ய தடை - ஐக்கிய அரபு அமீரகம்

Webdunia
புதன், 30 மே 2018 (08:20 IST)
கேரளாவில் வேகமாக நிபா வைரஸ் பரவி வருவதால், கேரளாவில் இருந்து வரும் பழங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து விதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய்க்காக உயிரை பலி கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக கூட்டத்தில் அடிதடி.. ஈரோட்டில் பரபரப்பு..!

போராட்டம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடையுங்கள்: டிரம்ப் உத்தரவு..!

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments