Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சிக்காக பறந்த விமானம்; செயலிழந்த என்ஜின்! – நொடி பொழுதில் நடந்த அசம்பாவிதம்!

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:43 IST)
உக்ரைனில் விமான பயிற்சிக்காக பறந்த ராணுவ விமானம் வெடித்ததில் 25 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு விமானத்தை இயக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் அண்டனோவ் யூ என் 26 ரக விமானத்தை இயக்க பயிற்சி அளிப்பதற்காக அந்த விமானத்தில் 20 பயிற்சி வீரர்களும், விமானிகள் உள்ளிட்ட 7 பேருமாக மொத்தம் 27 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் ஒரு பக்க என்ஜின் செயலிழந்துள்ளது. உடனடியாக கீழே இருந்த நெடுஞ்சாலை ஒன்றில் விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார்.

ஆனால் அதற்குள் விமானம் கட்டுப்பாட்டை இழக்கவே அந்த பகுதியில் இருந்த புதர் ஒன்றில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். விமானம் மோதுவதற்கு சில வினாடிகள் முன்பாக விமானத்திலிருந்து குதித்த இரு பயிற்சி வீரர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments