Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் தாக்குதலில் பங்கேற்க மாட்டோம்: திட்டவட்டமாக அறிவித்த பிரிட்டன், பிரான்ஸ்..!

Mahendran
வியாழன், 3 அக்டோபர் 2024 (11:18 IST)
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஈரான் மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் ஆகிய இருவரும், ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் இணைய போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதை அடுத்து, அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேல் மற்றும் ஈரான் பிரச்சனைகளை பேசி, சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது."


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்..

ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை! தனியார் பள்ளிகளை எச்சரித்த பள்ளிக்கல்வித்துறை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு Ex காங்கிரஸ் தலைவர் k.s. அழகிரி தலைமையில் மௌன ஊர்வலம்!

தமிழக - கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்தி அணி வகுப்பு மரியாதையுடன் மன்னர் உடைவாள் கேரளா அரசிடம் ஒப்படைப்பு!

சென்னையை வெளுக்க போகும் மழை சீசன்? படகுகளை வாங்கி குவித்த சென்னை மாநகராட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments