தாய்லாந்தில் பெண் கடலாமையின் வயிற்றில் இருந்து 5 கிலோ 915 சில்லறை காசுகள் நீக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில், பெண் கடல் ஆமை பார்க்க வினோதமாக இருந்தது. இதையடுத்து அந்த ஆமைக்கு குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.
இந்த ஆய்வில் அந்த ஆமைக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அதன் வயிற்றில் ஏதோ இருந்ததால், ஆமைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ஆமையின் வயிற்றில் உலோகங்கள் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விலங்குகள் நல மருத்துவர்கள் ஆமைக்கு சிகிச்சை அளித்ததோடு, அதன் வயிற்றில் இருந்த 915 சில்லறை காசுகள் வெளியேற்றப்பட்டது. இந்த சில்லறை காசுகளின் மொத்த எடை 5 கிலோ.
பேங்காக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இறை வழிபாடு என்ற பெயரில், கடலில் காசு போட்டால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையால் அங்கு சில்லறைகளை காசுகளை போடுவதால், அதை சாப்பிட்டு ஆமைக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விலங்கியல் ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.