Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு இரண்டரை ஆண்டு சிறை

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு இரண்டரை ஆண்டு சிறை
Arun Prasath
புதன், 12 பிப்ரவரி 2020 (21:04 IST)
சிசிடிவி ஸ்கிரீன்ஷாட்

துருக்கியில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்தவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் எஸ்கிசெஹிர் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு உணவகத்தில் டெலிவரி வேலை பார்த்துக்கொண்டிருந்த புராக் என்பவர், வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்தான விசாரணை நடந்த போது தான் எந்த தவறு செய்யவில்லை என புராக் குற்றத்தை மறுத்துள்ளார். எனினும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து நீதிமன்றம் இவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments