Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு இரண்டரை ஆண்டு சிறை

Arun Prasath
புதன், 12 பிப்ரவரி 2020 (21:04 IST)
சிசிடிவி ஸ்கிரீன்ஷாட்

துருக்கியில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்தவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் எஸ்கிசெஹிர் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு உணவகத்தில் டெலிவரி வேலை பார்த்துக்கொண்டிருந்த புராக் என்பவர், வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்தான விசாரணை நடந்த போது தான் எந்த தவறு செய்யவில்லை என புராக் குற்றத்தை மறுத்துள்ளார். எனினும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து நீதிமன்றம் இவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments