Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 8ஆம் தேதி விடுமுறையா? பொதுமக்கள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:40 IST)
பிப்ரவரி 8ஆம் தேதி விடுமுறையா?
தமிழர்களை விருப்பத்துக்குரிய கடவுளான முருகப் பெருமானுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசத் திருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் குறிப்பாக அறுபடை வீடுகளில் மிகச்சிறப்பான முறையில் தைப்பூசம் கொண்டாட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசத் திருநாளன்று முருகன் கோவில்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூச தினத்தன்று தமிழக அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு பிப்ரவரி எட்டாம் தேதி விடுமுறை அறிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
மற்ற மதங்களின் சிறப்பு தினங்கள் அன்று விடுமுறை அளித்து வரும் தமிழக அரசு இந்து மதத்தின் முக்கிய நாளான தைப்பூசத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments