Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளத்தில் எகிறி அடித்த சுனாமி: 44 பேர் படுகாயம்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (14:21 IST)
சீனாவிலுள்ள ஒரு வாட்டர் பார்க்கில், உருவாக்கப்பட்ட செயற்கை அலை, பேரலையாக உருவெடுத்ததில் 44 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஷூயுன் வாட்டர் பார்க்கில், மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது, அந்த குளத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது, இயந்திரம் மூலமாக செயற்கையான அலையை உருவாக்குவார்கள். இந்நிலையில் ஷுயுன் வாட்டர் பார்க்கில் இன்று செயற்கை அலை உருவாக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறால், சுனாமி போல் ஒரு பேரலை எழுந்துள்ளது.

10 அடிக்கு எழுந்த இந்த பேரலையில், நீச்சல் குளத்தில் குளித்துகொண்டிருந்த மக்கள் பலரும் அடித்து வீசப் பட்டார்கள். இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்தனர். எனினும் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்படுகிறது.

ஷூயுன் வாட்டர் பார்க்கில் ஏற்பட்ட இந்த பேரலையை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments