Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ எச்சரித்தாலும் அடங்காத ட்ரம்ப்! – நான்தான் வென்றேன் என தொடர் வாதம்!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (10:59 IST)
அமெரிக்க தேர்தலில் தோற்றுவிட்ட நிலையிலும் தேர்தல் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், அமெரிக்க தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும் தொடர்ந்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சர்ச்சைக்குரிய வகையில் அவர் இட்ட பதிவுகளை நீக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம் அவரை எச்சரித்தும் உள்ளது. அந்த எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாத ட்ரம்ப் தற்போது “நான் தேர்தலில் வென்றேன்” என மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் டிவீட்கள் அமெரிக்காவில் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அதே சமயம் பிடன் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர்களிடையே மோதல் நிகழ்வதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments