Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டை விட்டு வெளியேறுவேன்... ட்ரம்ப் ஆவேசம்!

Advertiesment
நாட்டை விட்டு வெளியேறுவேன்... ட்ரம்ப் ஆவேசம்!
, ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (15:33 IST)
அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் நாட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் என ட்ரம்ப் பேச்சு. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   
 
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ட்ரம்ப் மீண்டும் தனது பிரச்சார பணிகளை துவங்கியுள்ளார். இந்நிலையில் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் என்ன செய்வேன் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றில் மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வியடைந்தால், என்னால் நன்றாக இருக்க முடியாது. அதனால், இந்த நாட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கல, எப்படி கூட்டணி? அமித்ஷா