அமெரிக்கா விதித்த 50% வரி.. டிரம்புக்கு பிரேசில் அதிபர் கொடுத்த பதிலடி..!

Mahendran
வியாழன், 10 ஜூலை 2025 (11:48 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, உலக நாடுகளுக்கு வரி விதிப்பு மூலம் டிரம்ப் அச்சுறுத்திய நிலையில், தற்போது பிரேசிலை குறிவைத்துள்ளார். ஆகஸ்ட் 1 முதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
டிரம்பின் மிரட்டலுக்கு லூலா பதிலளித்தபோது, "பிரேசில் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம். ஆட்சி கவிழ்ப்பைத் திட்டமிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பிரேசிலின் சட்ட வரம்புக்குள் மட்டுமே வரும். 
 
உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பிரேசில் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவுடன் $410 பில்லியன் வர்த்தகம் செய்துள்ளோம். இந்த வரி விதிப்பை பிரேசிலின் பொருளாதார சட்டங்களின்படி எதிர்கொள்வோம்," என்று தனது 'எக்ஸ்' தளத்தில் உறுதியாகப் பதிலளித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments