ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு விதித்த டிரம்ப்.. விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை..!

Siva
புதன், 1 அக்டோபர் 2025 (08:09 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் காசா போரை நிறுத்த பல்வேறு திட்டங்களை வகுத்த நிலையில், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு போரை நிறுத்த ஒப்புக்கொண்டார். ஆனால், ஹமாஸ் அமைப்பு போரை நிறுத்த ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ஹமாஸுக்கு அதிபர் டிரம்ப் 4 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
 
காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் 20 அம்சத் திட்டங்கள் மீது உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டால், அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்றும், ஒருவேளை நிராகரித்தால் மோசமான முடிவாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
இந்த எச்சரிக்கைக்குப் பின் ஹமாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன, 3 ஆண்டு போர் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை ஹமாஸ் அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால், ட்ரம்பின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments