கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

Mahendran
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (17:53 IST)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 உயிர்களை பலிவாங்கிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, பாஜக எட்டு எம்.பி.க்கள் கொண்ட குழுவை அமைத்து, இன்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது.
 
பாஜக குழுவினரிடம் பேசிய ஒரு பெண்மணி, “எதிர்ப்பக்கத்தில் சிலர் கத்தியால் கைகளை அறுத்தனர். எனக்கு தெரிந்த நான்கு பேர் கையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சிலரின் கை உடைந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும், கூட்ட நெரிசலுக்குக் காரணம், சில இளைஞர்கள் மரங்களின் மீது ஏறியதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். “விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எதிர்ப்பக்கத்திலும், இந்தப் பக்கத்திலும் மரங்களில் ஏறியிருந்த சிலர் கீழே விழுந்தனர். இதுவும் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணமாக அமைந்தது” என்று அவர் கூறினார்.
 
இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக குழுவினர் நேரில் கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்தச் சாட்சியம், கரூரில் நடந்த நெரிசலுக்கு பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

"எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம், எங்கள் மீது தவறு இல்லை": கரூர் சம்பவம் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ

அடுத்த கட்டுரையில்
Show comments