Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட்டது யாருக்கு? வாக்களித்த பின் வெளியே வந்த டிரம்ப் பேட்டி

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:37 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு முழுவதும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைபெறுகிறது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப் புளோரிடாவில் தனது வாக்கை பதிவு செய்தார். புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் உள்ள நூலகம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் டிரம்ப், தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பொதுவாக முகக்கவசம் அணிவதை டிரம்ப் விரும்ப மாட்டார். ஆனால் வாக்களிக்க வந்த போது முக கவசம் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘டிரம்ப் என்ற நபருக்கு தான் வாக்களித்ததாக தெரிவித்திருந்தார் 
 
நாடு முழுவதும் வரும் நவம்பர் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதிபர் டிரம்ப் தற்போது தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக் கணிப்பின்படி இந்த முறை டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments