Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா? – ட்ரம்ப் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (09:24 IST)
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இரண்டாம் உலக போருக்கு பிறகு உலகளாவிய பாதுகாப்பிற்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 29 நாடுகள் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின. ராணுவரீதியாக இணைந்து செயல்படும் இந்த அமைப்பு வியட்நாம், ஈரான் யுத்தங்களில் மிகப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நேட்டோ நாடுகள் தங்கள் பங்குகளை சரிவர நிர்வகிப்பதில்லை என்பதால் அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் “நேச நாடுகள் அமைப்பில் ஒவ்வொரு நாடும் 2 சதவீதம்தான் தங்களது பங்குகளை அளிக்கின்றன. இது மிகவும் குறைவான விகிதம். சில நாடுகள் அதையும் செலுத்துவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்கா நேட்டோ படையில் தனது பங்களிப்பை குறைத்து கொள்ளும். ஆனால் முழுமையாக வெளியேற அமெரிக்கா திட்டமிடவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments