Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் - கிம் சந்திப்பு என்ன ஆச்சு? அபிநந்தன் வரவால் மறந்தே போச்சு

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (13:06 IST)
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலின் போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமனப்படை வீரர் அபிநந்தன் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுதான் நேற்றைய பிரதான செய்தியாக இருந்தது. 
ஆனால், நேற்றும் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்துள்ளது. ஆம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இரண்டாவது முறையாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது. 
 
வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம்மும் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் அணு ஆயுதத்தை முழுமையாகக் கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால் இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கிம் கூற டிரம்ப் அதை ஏற்காததால் இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது. 
 
இவ்விருநாடுட்டு அதிபர்களும் முதல் முறை சந்தித்த போது அனைவரும் இதை பற்றி பேசினர். ஆனால், இம்முரை அபிநந்தனின் வரவு இவர்களின் சந்திப்பை மறக்க செய்துவிட்டது. இரண்டாம் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளாதால் வடகொரியா மீண்டும் தங்களது அணு ஆயுத சோதனைகளை கையில் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments