Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் தக்காளி விலை ரூ.300! இந்தியா காரணமா?

பாகிஸ்தானில் தக்காளி விலை ரூ.300! இந்தியா காரணமா?
, புதன், 27 செப்டம்பர் 2017 (06:40 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தக்காளியின் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானில் தற்போது தக்காளி கிலோ ஒன்றின் விலை ரூ.300க்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
பாகிஸ்தானுக்கு தக்காளியை பெருமளவு அனுப்பும் இந்தியா, கடந்த சில மாதங்களாக கண்டெய்னர்கள் எல்லையை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனுப்பப்படவில்லை. இதுவே தக்காளி விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது
 
இதுகுறித்து பாகிஸ்தான் உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் போசான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் இப்போது நிலவும் தக்காளி மற்றும் வெங்காய பற்றாக்குறையானது சில நாட்களில் சரிசெய்யப்படும், பலுசிஸ்தானில் இருந்து விளைச்சல் பொருட்கள் வந்ததும் நிலை சீராகும். எந்த நிலையிலும் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் காய்கறிகளை வாங்காது என அவர் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் ஆறு பேர் யார் யார்?