இன்று அபூர்வ சூரிய கிரகணம்.. ஒரு நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்ததால் மக்கள் அதிருப்தி..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:24 IST)
400 ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்ததை அடுத்து மேகமூட்டம் காரணமாக ஒரே ஒரு நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்ததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள வடமேற்கு கடற்கரை பகுதியான எக்ஸ்மவுத் என்ற நகரில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என்பதால் இந்த நகருக்கு உலகெங்கிலும் இருந்து பல வானியல் நிபுணர்கள் குவிந்திருந்தனர்.
 
இந்த நிலையில் இன்று கிரகணம் தொடங்கிய நிலையில் திடீரென மேகமூட்டம் காரணமாக சரியாக பார்க்க முடியவில்லை என்றும் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் இது நம்ப முடியாத வகையில் இருந்தது என்றும் மிகவும் பிரகாசமாகவும் அற்புதமாகவும் தெளிவாகவும் சூரிய கிரகணம் தெரிந்தது என்றும் ஆனால் ஒரே ஒரு நிமிடத்தில் மட்டும் முழு கிரகணத்தை பார்க்க முடிந்தது  என்றும் இந்த சூரிய கிரகணத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments