Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்து செய்யப்படுமா குரூப் 4? உச்சக்கட்ட ஆலோசனையில் டி.என்.பி.எஸ்.சி!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (10:52 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையத்தின் குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றோர் பெரும்பாலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தது சர்ச்சையை எழுப்பியது. தேர்வில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தேர்வு எழுதியவர்கள் மற்றும் விடைத்தாள் திருத்தியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையின் முடிவு இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முறைகேடு நடந்திருப்பது நிரூபணமானால் தேர்வு செல்லாததாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. எவ்வாறு முறைகேடு நடந்தது என்பதை ஆராய்ந்து மீண்டும் அப்படி நிகழாதாவாறு புதிய விதிமுறைகளுடன் மீண்டும் தேர்வு வைக்கப்படலாம் என் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் எதிர்காலத்தில் நடக்க போகும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என தேர்வு எழுத காத்திருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments