Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எச் ஐ வி வைரஸில் இருந்து குணமான நபர்… புற்றுநோய் பாதிப்பு உச்சம்!

எச் ஐ வி வைரஸில் இருந்து குணமான நபர்… புற்றுநோய் பாதிப்பு உச்சம்!
, சனி, 26 செப்டம்பர் 2020 (16:56 IST)
உலகிலேயே ஹெச் ஐ வி வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட நபருக்கு புற்றுநோய் பாதிப்பு முற்றியுள்ளது.

ஹெச் ஐ வி எனும் கொடிய வைரஸால் தோன்றும் எய்ட்ஸ் நோய்க்கு இன்றுவரை மருந்தே இல்லை. ஆனால் மாத்திரைகள் மூலமாக ஆரோக்யமான வாழ்வை இயன்றவரை நீட்டிக்கலாம். ஆனால் உலகிலேயே முதல் நபராக எச் ஐ வி யில் இருந்து, முழுவதும் மீண்ட நபராக அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஸ்டெம்செல்' மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

அதிலிருந்து 12 ஆண்டுகள் அவருக்கு எச் ஐ வி பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அவர் எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட போதே புற்றுநோய் பாதிப்பும் இருந்தது. அதற்காக அவர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில் இப்போது அவருக்கு புற்றுநோய் முற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த எஸ்.பிபிக்கு பதிலாக உயிருடன் உள்ளவருக்கு இரங்கல் தெரிவித்த செல்லூர் ராஜூ