Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுதியில் ஏப்ரல் 18 முதல் தியேட்டர் திறக்கப்படும்; சவுதி அரேபிய அரசு அறிவிப்பு

சவுதியில் ஏப்ரல் 18 முதல் தியேட்டர் திறக்கப்படும்; சவுதி அரேபிய அரசு அறிவிப்பு
, வியாழன், 5 ஏப்ரல் 2018 (12:02 IST)
40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 18 ஆம் தேதியிலிருந்து சவுதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். 
 
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆண்கள் அனுமதி இல்லாமல் இனி சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் என சவுதி அரசு தெரிவித்தது. அதேபோல் பெண்கள் கார் ஓட்டவும் அனுமதித்துள்ளது.
webdunia
இந்நிலையில் கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவுக்கு அனுமதி வழங்க சவுதி அரசு தற்பொழுது முடிவு செய்தள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் சவுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினாவில் போராட்டம் - வலுக்கட்டாயமாக ஸ்டாலின் கைது