Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஓடிப் போன மனைவி ’குறித்து கவிதைகள் எழுதும் துபாய் மன்னர் !

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (14:38 IST)
சமீபத்தில் துபாய் மன்னர், முகமது பின் ரஷித் அல் மக்தூம் - ன் மனைவி, கோடிக்கணக்கான பணத்துடன் தப்பி வெளிநாட்டுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகின.அதனால் விரக்தி அடைந்த மன்னர் தற்பொழுது சோகத்தில் கவிதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப்படும் துபாயில் மன்னர் ஆட்சு நடைபெறுகிறது. இந்த நாட்டை ஆட்சி செய்பவர் மன்னர் ஷேக் ரஷித் மக்தூம் (69)இவரது மனைவி சமி ஹயா பிண்ட் அல் ஹீசைன். இந்த தம்பதிகளுகு சையத் (7), ஜலீலா (11) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் மன்னருக்கும் , மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமானதாகத் தெரிகிறது. இதனால் மன்னரிடம் இருந்து ஹயா விவாகரத்து கேட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து , கடந்த மே மாதத்தில் தனது குழந்தைகளுடன் ஹயா தலைமறைவானார். தற்போது அவர் ஜெர்மனிக்கு சென்றதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தற்போது அவர் லண்டனின் தங்கி இருப்பதாகவும் மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
 
தனது மனைவி மற்றும் ஹயா சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாட்டுக்குக் கிளம்பிச் சென்றதால் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் மக்தூம் சோகத்தில்  ஆழ்ந்துள்ளாராம். அவர் அண்மையில் எழுதிய கவிதைக்கு ’நீ வாழ்ந்தாய்.. இறந்தாய்’ என்ற தலைப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments