Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவர்களின் போராட்டம் எதிரொலி.! 30% இட ஒதுக்கீடு ரத்து.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Bangladesh

Senthil Velan

, ஞாயிறு, 21 ஜூலை 2024 (21:32 IST)
வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் ரத்துச் செய்யப்பட்டிருந்த இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ம் தேதி முதல் வங்கதேசத்தில் போராட்டம் வெடித்தது. மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை 130க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். 

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்தது.

 
இந்நிலையில், வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணின் தலையில் 77 ஊசிகள்..! மண்டை ஓட்டைக்குள் செலுத்தியது யார்.? அதிர்ச்சி தகவல்.!!