Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் குடிபோதையில் ஊழியரின் கையை கடித்த பயணி!

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (14:14 IST)
அமெரிக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆல் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஊழியரின் கையை குடிபோதையில் பயணி கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான டோக்கியோவில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நோக்கி, ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் 159 பயணிகள் பயணித்த நிலையில், அதில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமான ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த விமானம் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, விமானத்தில் நடந்த சம்பவம்  பற்றி தனக்கு நினைவில்லை என்று அவர் கூறியதாக தெரிகிறது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும், அந்த பயணி குடிபோதையில் இருந்ததாகவும், அவர் ஊழியரின் கையை கடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜப்பான் விமான போக்குவரத்தில் இதற்கு முன் பல்வேறு சம்பவங்கள் நடந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments