Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுநர் பதவியா எனக்கா? வதந்திகளுக்கு முத்தையா முற்றுப்புள்ளி!

ஆளுநர் பதவியா எனக்கா? வதந்திகளுக்கு முத்தையா முற்றுப்புள்ளி!
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:19 IST)
நான் அரசியல்வாதி அல்ல, இலங்கை அரசு எனக்கு எந்த பதவியும் வழங்கவில்லை என முத்தைய முரளிதரன் தெரிவித்துள்ளார். 
 
இலங்கை கிரிக்கெட் அணியில் சுழல்பந்து வீச்சாளராக ஜொலித்த முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். இந்திய தமிழரான முத்தையா முரளிதரன் அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாக பேசி வந்தவர். தற்போது இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்‌ஷே சகோதாரர்கள் வெற்றி பெற்றதற்கு நேரடியாகவே வாழ்த்துக்கள் கூறியிருந்தார் முத்தையா முரளிதரன். 
 
எனவே, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண பகுதிக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பிரபல நாளிதழுக்கு ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார் முத்தையா முரளிதரன். அவர் தெரிவித்ததாவது, 
 
நான் ஆளுநர் ஆவதாக கூறப்படுவது, பேஸ்புக் மூலம் பரவிய ஒரு வதந்தி. எனக்கு அந்த பதவி வ்ழங்கப்படவில்லை. எந்த சந்தர்பத்திலும் நான் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. நான் ஒரு விளையாட்டு வீரன், கிரிக்கெட் வீரர் அரசியல்வாதி அல்ல. 
 
மக்களின் நன்மைக்காக எனது அறக்கட்டளை ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 60,000 இலங்கை மக்களுக்கு உதவி செய்து வருகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு எந்த வகையிலும் மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம் !