Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை : மருத்துவ உலகின் ஆச்சரியம் !

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (15:55 IST)
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்திலுள்ள சானியாகோ நகரில் ஷார்ப் மேரி பிர்ச் என்ற மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.அத்துடன் அவரது வயிற்றில் உள்ள 23 வாரங்களே ஆன குழந்தையை, அறுவை சிகிச்சை செய்து உடனடியாக வெளியே எடுத்தால் மட்டும்தான் அப்பெண் பிழைக்க முடியும் என்ற மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
பின்னர் உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
 
வெறும் 23 வாரங்களே ஆன அக்குழந்தை 245 கிராம் எடையுடன் தான் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இக்குழந்தை பிறந்தால்  ஒருமணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்குமென்று தெரிவித்த நிலையில் தீவிரமான மருத்துவர் சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட குழந்தை தற்பொழுது 2.2. கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
 
இக்குழந்தையின் பெயர் 'சேபீ' என்று அழைத்துவருகின்றனர்.அதாவது உலகின் மிகக்குறைவான் எடையுடன் பிறந்த குழந்தை சேபீ தான் என்று அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments