Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புனித மருந்தென்று 50000 பேருக்கு பினாயிலை ஊற்றிய பாதிரியார்

புனித மருந்தென்று 50000 பேருக்கு பினாயிலை ஊற்றிய பாதிரியார்
, புதன், 22 மே 2019 (10:56 IST)
உகாண்டாவில் புனித மருந்து என்ற பெயரில் பினாயிலை மக்களுக்கு குடிக்க கொடுத்த அமெரிக்க பாதிரியாரை போலீஸ் கைது செய்தனர்.
 
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெந்தகோஸ்தே பாதிரியார் ராபர்ட் பால்ட்வின். உகாண்டாவில் மத பரப்புரையாளராகவும், பாதிரியாராகவும் பல வருடங்களாக பணிபுரிகிறார். இவர் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்து என சொல்லி அவரவர் வயதுகேற்ப வகைவகையான கெமிக்கல்களை வாங்கி அவர்கள் வாயில் ஊற்றியுள்ளார். இதனால் சுமார் 50000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் உபயோகித்த கெமிக்கல்கள் துணியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற பயன்படும் பினாயில் வகை கெமிக்கல்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வகையான கெமிக்கல்களை வைத்து நோயை சரிசெய்ய முடியும் என்று உலகமெங்கும் சொல்லி திரியும் எம் எம் எஸ் (MMS - Miracle Mineral Solution) என்ற அமைப்பை சேர்ந்தவர்தான் இந்த பால்ட்வின் என கண்டுபிடித்துள்ளனர். இந்த அமைப்பு கனடா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஸ்டடியில் இருந்த கைதியுடன் உல்லாசம்; கைதான பெண் காவலர்!