Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - ஈரான் போர்! டிவியில் ஒளிபரப்பிய ஈரான்!

Prasanth K
செவ்வாய், 24 ஜூன் 2025 (10:53 IST)

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது போரை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போர் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு நாடுகளும் ஏவுகணைகளால் தாக்கிக் கொண்ட நிலையில், அமெரிக்க விமானங்கள் ஈரானின் அணு சக்தி பகுதிகளை தாக்கியதும், அதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை ஈரான் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் போர் பெரிய அளவில் மாறப்போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்திற்கு தான் பேசியுள்ளதாக ட்ரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்த செய்தியை ஈரான் மறுத்த நிலையில், தற்போது ஈரான் தனது போர் நிறுத்த அறிவிப்பை அந்நாட்டு டிவி சேனல்களில் ஒளிபரப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கி இரண்டு வாரத்திற்குள்ளேயே முடிவுக்கு வந்துள்ள நிலையில், இனி படிப்படியாக விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments