Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுதலை! – இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (10:41 IST)
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த மூன்று மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதல் தாக்குதலை ஹமாஸ் தொடங்கி இருந்தாலும் அதன்பின்னர் இஸ்ரேல் காசா மீது மேற்கொண்டு வரும் தாக்குதலால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதம் நடத்தப்பட்ட குறுகிய கால போர் நிறுத்தத்தின் போது இரு தரப்பிலும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் தற்போது மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம் உலக நாடுகள் போரை நிறுத்தக் கோரியும் கேட்காமல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலை எச்சரித்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அதேசமயம் இஸ்ரேலோ ஹமாஸால் ஆபத்தில்லாத சூழல் ஏற்படும் வரை போர் நடைபெறும் என கூறியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments