Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிக் டாக் செயலியை 50 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் பிரபல நிறுவனம் !

டிக் டாக் செயலியை 50 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் பிரபல நிறுவனம் !
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:45 IST)
சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.

ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.  

தற்போதைய தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 

பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விரைவிலேயே மைக்ல்ரோன் சாப்ட் நிறுவனத்திற்கு டிக்டாக்கை விற்கும்படி அடிபர் டிரம்ப் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் உலகப் பிரபலமான  டிக்டாக்கை மைக்ரோசாப்ட் நிறுவனம் 50 பில்லியன் டாலர்களுக்கு வாங்கவுள்ளதக தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமா துறையினர் இடையே ஒற்றுமை இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ