Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் குறித்து முதல்முதலாக எச்சரித்த மருத்துவர் மரணம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (09:14 IST)
கொரோனா வைரஸ்
சீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 600 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கை செய்த டாக்டர் ஒருவர் அதே வைரஸ் தாக்கியதில் உயிரிழந்த பரிதாபம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் குறித்து முதல்முறையாக லீ என்ற மருத்துவர் தான் சீனாவின் அரசு இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை எழுதினார். இந்த கட்டுரையில் கொரோனா எவ்வளவு அபாயகரமானது என்றும், அந்த வைரஸ் மக்களிடம் தொற்றினால் உலகம் முழுவதும் விளைவு கடுமையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த கட்டுரையை எழுதியவர் சமீபத்தில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியானது இந்த நிலையில் நேற்று அவர் மரணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணச் செய்திகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றும், அவரது மரணம் குறித்து சீன அரசு தெளிவான தகவலை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 100 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments