Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Prasanth Karthick
வெள்ளி, 21 மார்ச் 2025 (10:23 IST)

காலம் காலமாக விடை தெரியாமல் இருந்து வரும் புதிர் கேள்விகளில் ஒன்று முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா? என்பதுதான். 

 

முட்டைதான் முதலில் வந்தது என்றால் அதை எந்த கோழியும் போடாமல் எப்படி வந்திருக்கும் என்றும், கோழிதான் முதலில் வந்தது என்றால் எந்த முட்டையும் இல்லாமல் கோழி எப்படி வந்திருக்கும் என்றும் மடக்கி கேள்வி கேட்டு விளையாடுவது ஒரு வேடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது.

 

இந்நிலையில்தான் இந்த கோழி, முட்டை மேட்டரை சீரியஸாக எடுத்துக் கொண்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழு இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

 

இங்கிலாந்தி ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கோழியின் முட்டை ஓடு உருவாக OvoCleidin 17 OC 17 என்ற புரதம் முக்கியத் தேவையாக உள்ளது. இந்த புரதம் கோழியின் கருப்பையில் மட்டுமே உள்ளது. அதனால் ஒரு முட்டை உருவாக அது ஒரு கோழியின் கருப்பைக்குள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது நிரூபணமாகியுள்ளதால், முதலில் வந்தது கோழிதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments