Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போருக்கு எதிரான நிலை உருவாகியுள்ளது- உக்ரைன் அதிபர்

போருக்கு எதிரான நிலை உருவாகியுள்ளது- உக்ரைன் அதிபர்
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:33 IST)
போருக்கு எதிரான நிலை உருவாகியுள்ளதாக உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது  மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான நிதி முடக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத்தெரிகிறது.

பெலாராஸ் நாட்டில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடந்துவதற்கு ரஸ்யா முன் வந்துள்ளது. தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்கள், உணவுகள், மருந்துகள் வழங்கி வருகின்றன. எனவே சர்வதேச அளவில் போருக்கு எதிரான வலுவான நிலையை கூட்டமைப்பு உருவாகியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி  கூறியுள்ளார்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் மாதத்தில் 4 வது அலை பரவ வாய்ப்பு?