Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெக்சாஸ் - இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது!

Advertiesment
அமெரிக்கா
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (12:32 IST)
டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கே பார்த்தாலும் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்று ஆத்திரத்தில் அமெரிக்க பெண் ஒருவர் இந்திய பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது இதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் இந்திய பெண்களை அமெரிக்க பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி உள்ளார். இதனை அடுத்து அவர் போலீசாரால் பிடிபட்டபோது நான் இந்தியர்களை வெறுக்கிறேன், இந்த இந்தியர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ அமெரிக்காவுக்கு வருகிறார்கள். இந்தியர்கள் எங்கே பார்த்தாலும் இருக்கிறார்கள். இவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

எனவே இந்தியாவுக்கு அனைவரும் திரும்பிச் செல்லுங்கள் என்று பேசினார். இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் டெக்சாஸ் சட்டங்களின் படி ஒரு வெறுப்பு குற்றமாகும் என்று சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபரேசன் தாமரை, ஆபரேசன் சேறு ஆகிவிடும்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு