Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவ வார்டில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 11 கர்ப்பிணிகள் 2 குழந்தைகள் பலி

Webdunia
புதன், 13 மே 2020 (07:07 IST)
பிரசவ வார்டில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
கொரோனா வைரஸ் பரபரப்பாக இருக்கும் இந்த காலத்திலும் தீவிரவாதிகள் தங்கள் அட்டகாசத்தை குறைத்துக் கொண்டதாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவ வார்டில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் 11 கர்ப்பிணிகளும் இரண்டு பச்சிளம் குழந்தைகளும் மற்றும் செவிலியர்கள் சிலரும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் அரசு மருத்துவமனையில் சுமார் 100 பெண்கள் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு போலீஸ் உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனை அடுத்து அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 11 தாய்மார்களும், இரண்டு பச்சிளங்குழந்தைகளும் கொல்லப்பட்டதாக ஆப்கன் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும், இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மிட்புப்படையினர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளை வேறு இடத்திற்கு மாற்றினர். இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments