Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பலி; ஆமைக்கறிக்கு தடை விதித்த தான்சானியா!

Advertiesment
ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பலி; ஆமைக்கறிக்கு தடை விதித்த தான்சானியா!
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (08:35 IST)
தான்சானியாவில் ஆமைக்கறி சாப்பிட்ட பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் பகுதியில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் சிலர் கடல் ஆமையை உணவாக உண்டுள்ளனர். இதனால் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுபோல இதற்கு முன்னரும் பெம்பா தீவு மக்கள் ஆமைக்கறி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் அந்த நாட்டில் கடல் ஆமைக்கறியை சாப்பிட தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை பேறு பெண்ணின் மூளையில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?