Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ராணுவ வீரர்கள் தகவல் அடங்கிய சாதனத்தை தாலிபான்கள் பிடியில்?

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
அமெரிக்க ராணுவ வீரர்கள் பற்றிய தகவல் அடங்கிய சாதனத்தை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான் படைகள் புகுந்து அந்நாட்டின் தலைநகரை பிடித்து விட்டது என்பதும் தற்போது ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பற்றிய தகவல் அடங்கிய சாதனத்தை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்களுக்கு எதிரான அமெரிக்க போரில் முக்கிய பங்காற்றிய ஆப்கானியர் பற்றிய தகவல்களும் சிக்கியுள்ளன. 
 
HIIDE எனப்படும் சாதனத்தில் அமெரிக்க வீரர்கள், உதவிய ஆப்கானியர்கள் பற்றிய அடையாளங்கள் பதியப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவத்துக்கு உதவிய நபர்களை ஹைட் சாதனம் மூலம் கண்டறிந்து தாலிபான்கள் பழிவாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 
போரில் கைப்பற்றியுள்ள அமெரிக்க ராணுவத்தின் நவீன ஆயுதங்களையும் தாலிபான்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கான் ராணுவத்துக்கு அமெரிக்கா தந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை தாலிபான்கள் வசம் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments