Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவம் மீது தற்கொலைப்படை தாக்குதல்! பலுச் விடுதலை படையால் அடுத்தடுத்து அதிர்ச்சி!

Prasanth Karthick
திங்கள், 17 மார்ச் 2025 (11:09 IST)

சமீபத்தில் பாகிஸ்தான் ரயிலை கடத்திய பலுச் விடுதலை படையினர் தற்போது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

 

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக விடுதலை அளிக்க கோரி பலுச் விடுதலை படை என்ற அமைப்பு பல காலமாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத குழுவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு சமீபத்தில் 400 பேர் பயணித்த பாகிஸ்தான் ரயிலை கடத்தி பயணிகளை பணையக் கைதிகளாக பிடித்தனர்.

 

பாகிஸ்தான் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி 33 பயங்கரவாதிகளை கொன்று மக்களை மீட்டனர். 

 

இந்நிலையில் தற்போது பலுச் விடுதலை படையினர் பாகிஸ்தான் ராணுவம் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று காலை நோஷிகி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ராணுவ வாகனங்கள் சென்றபோது உள்ளே புகுந்த பயங்கரவாதியின் வாகனம் ஒன்று வெடித்து சிதறியது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

 

இந்த தாக்குதல் வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ள பலுச் விடுதலை படை, அதன்மூலம் இந்த தாக்குதலை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மாஃபியாக்களுக்கான ஆட்சியா? எச். ராஜா

அண்ணாமலை, தமிழிசை, எச் ராஜா வீடுகள் முன் போலீசார் குவிப்பு.. கைதாகிறார்களா?

எப்படியாவது கோவிலை காப்பாத்துங்க! கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய அர்ச்சகர்! - அதிர்ச்சி சம்பவம்!

மகனுக்கு சீட் கேட்ட செங்கோட்டையன்.. மறுத்த எடப்பாடி?? - மோதலுக்கு இதுதான் காரணமா?

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments