Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூயஸ் கால்வாயில் பயணத்தை துவங்கிய எவர் கிவன்: தங்கம், எண்ணெய் விலை குறையும்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (08:00 IST)
எவர் கிவன் கப்பல் நேர்கோட்டில் நிறுத்தப்பட்டு, தனது பயணத்தை இந்த கப்பல் தொடங்கியது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கு இடையே போக்குவரத்துக்கு பெரும் பாலமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியே பயணித்த எவர்கிவன் என்ற சரக்குக்கப்பல் கால்வாயின் குறுக்கே கிடைமட்டமாக சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  
 
எனவே, கப்பல் சிக்கிய பகுதிகளில் மணலை தோண்டி ஆழப்படுத்தி பின்னர் இழுவை படகுகளை கொண்டு கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி எவர் கிவன் கப்பல் தரைதட்டிய இடத்தில் 18 மீட்டர் ஆழத்திற்கு 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து நேற்று இந்த கப்பல் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு எவர் கிவன் கப்பல் நேர்கோட்டில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தனது பயணத்தை இந்த கப்பல் தொடங்கியது. கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. 
 
கப்பல் போக்குவரத்து தொடங்கியதையடுத்து கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை முன்பை விட குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments