Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்; ஆபத்தில் பொருளாதாரம்! – எகிப்து அதிபர் புதிய உத்தரவு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (10:01 IST)
எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலை மீட்கும் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் எகிப்து அதிபர் புதிய உத்தரவிட்டுள்ளார்.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கு இடையே போக்குவரத்துக்கு பெரும் பாலமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியே பயணித்த எவர்கிவன் என்ற சரக்குக்கப்பல் கால்வாயின் குறுக்கே கிடைமட்டமாக சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பல் சிக்கிய பகுதிகளில் மணலை தோண்டி ஆழப்படுத்தி பின்னர் இழுவை படகுகளை கொண்டு கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பை சமாளிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள எகிப்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். கப்பலில் சுமார் 18 ஆயிரம் கண்டெய்னர்கள் உள்ள நிலையில் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு கப்பலை நகர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments