Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை

Advertiesment
இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை
, சனி, 4 டிசம்பர் 2021 (00:04 IST)
இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று (03) மதியம் 12 மணியளவில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது.
 
பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன கூறியுள்ளார்.
 
இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், கொழும்பின் சில பகுதிகளுக்கு மாத்திரம் மின் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மேலும் சில மணிநேரம் எடுக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமையினால், நாட்டின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
 
மேலும், மின்சாரம் தடைப்பட்டுள்ளமையினால், வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ள நிலையில், பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன். ரயில் சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால், ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை காத்ரினா கைப் – விக்கி கவுஷல் திருமணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் !