Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குள்ள இருக்க சொன்னா சுத்திக்கிட்டு இருக்கீங்களா? – 5 பேர் சுட்டுக்கொலை!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (10:28 IST)
ரஷ்யாவில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களை ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு உலக அளவில் வேகமாக அதிகரித்து வருவதால் பல நாடுகள் முடங்கியுள்ளன. பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. அந்த வகையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள எலட்மா என்ற பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியே வட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 31 வயது நபர் ஒருவரின் வீட்டருகே 4 ஆண்களும் ஒரு பெண்ணும் கூடி பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களை கலைந்து போக சொல்லியுள்ளார் அந்த நபர். ஆனால் அவர்களை அதை பொருட்படுத்தாததால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் துப்பாக்கியால் 5 பேரையும் சுட்டு கொன்றுள்ளார். இந்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments