Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 10 வரை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் எரிபொருள்! – இலங்கை நெருக்கடி!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (08:13 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமான நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் உணவுக்கே அல்லாடிய நிலையில் கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

இதனால் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகி ரணில் விக்ரமசிங்கெ பிரதமரானார். அதுமுதல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதே சமயம் பொருட்கள் கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகளும் உள்ளன.

தற்போது இலங்கையில் ஜூலை 10ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 10ம் தேதிவரை நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும், பிற சேவைகளும் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments