Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களுக்கு சிறப்பு ராமாயண சுற்றுலா ரயில்! – பக்கா ப்ளான் போட்ட இலங்கை!

Srilanka
Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (08:30 IST)
இலங்கையில் உள்ள ராமாயண புகழ்பெற்ற பகுதிகளை சுற்றி காட்ட இந்தியர்களுக்கு சிறப்பு ரயில் சேவையை தொடங்குவதாக இலங்கை அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, ஆட்சி கலைப்பு ஆகியவற்றால் ஸ்திரத்தன்மை இழந்து தத்தளித்த இலங்கை மெல்ல பிரச்சினைகளை சரிசெய்து வருகிறது. நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ள நிலையில் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்படுவதுடன், பொருளாதாரத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் முதுகெலும்பாக திகழும் சுற்றுலா துறையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை கவர்வதற்காக “இந்தியர்களுக்கு சிறப்பு ராமாயண சுற்றுலா ரயில் சேவை”யை இலங்கை சுற்றுலா துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரயில் இலங்கையில் ராமாயண சிறப்பு கொண்ட பகுதிகள், ஸ்தலங்கள் என மொத்தம் 52 பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும். மேலும் ஒரு ஆண்டில் பல முறை இலங்கை பயணிக்கும் வகையிலான விசாவை வழங்கவும் இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments