ராணுவ பறிச்சி முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்: 60 பேர் பலி
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:50 IST)
ஏமனில் ராணுவ பயிற்சி முகாம் ஒன்றிற்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய டிரக்கை ஓட்டி
வந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர், 29 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை
அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா தலைமையில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க அதிபர் ஹாதி தரப்பினரும், ஹவுத்தி கிளர்ச்சி குழுவினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்