Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பத்துலே இருந்தே ராங்கா போகுது! கண்டம் விட்டு பாயும் ஏவுகணை! – வட கொரியாவால் அமெரிக்கா அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:50 IST)
அமெரிக்காவுடன் தொடர்ந்து பகைமை பாராட்டி வரும் வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – வட கொரியா இடையே தொடர்ந்து முரண்பாட்டு மோதல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ளதால் இரு நாடுகள் இடையே சுமூகமான உறவுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டை ஒரே சமயத்தில் சோதித்து பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவை என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவற்றின் சோதனைக்கு தடை விதித்துள்ள நிலையிலும் வட கொரியா இதை சோதித்து பார்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் வட கொரிய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுகுறித்து நட்பு நாடுகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments