Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பத்துலே இருந்தே ராங்கா போகுது! கண்டம் விட்டு பாயும் ஏவுகணை! – வட கொரியாவால் அமெரிக்கா அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:50 IST)
அமெரிக்காவுடன் தொடர்ந்து பகைமை பாராட்டி வரும் வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – வட கொரியா இடையே தொடர்ந்து முரண்பாட்டு மோதல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ளதால் இரு நாடுகள் இடையே சுமூகமான உறவுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டை ஒரே சமயத்தில் சோதித்து பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவை என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவற்றின் சோதனைக்கு தடை விதித்துள்ள நிலையிலும் வட கொரியா இதை சோதித்து பார்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் வட கொரிய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுகுறித்து நட்பு நாடுகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments