Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவம்: மன்னிப்பு கோரிய தென் கொரியா

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (18:37 IST)
தென் கொரியாவில் 38 வருடங்களுக்கு முன்னர் அரசுக்கெதிராக நடந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள் அங்கிருந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.
 
1980 ஆம் ஆண்டு குவாங்ஜு நகரத்தை சேர்ந்த அப்பாவி பெண்களின் மீது ராணுவத்தினர் தொடுத்த விவரிக்க முடியாத வலி நிறைந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த விசாரணையின் மூலம் இளம்பெண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணி உள்பட 17 பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல்ரீதியான தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது என்று பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதை தவிர்த்து மில்லியன் மன்னிப்பு கோரினாலும் அதற்கு பலனில்லை என்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவரான கிம் சன்-ஓக் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்