Publish Date: Fri, 03 Aug 2018 (16:13 IST)
Updated Date: Fri, 03 Aug 2018 (16:17 IST)
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு விசித்திரமான உருவம் கொண்ட குழந்தை போல் உள்ளது.
அதாவது, பன்றியும் மனித உருவமும் கொண்டாதாக உள்ளது இந்த குழந்தையின் உருவம். இந்த புகைப்படத்தை பதிவு செய்து பலரும் யாரோ ஒருவர் பன்றியுடன் உடலுறவு வைத்ததால் இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது என குறிப்பிட்டு வருகின்றனர்.
பலர் இந்த சம்பவம் இந்த ஊரில்தான் நடந்தது எனவும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகத்தையும் சமூக வலைத்தளங்களில் பலர் முன்வைத்தனர்.
எனவே, இது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது. இத்தால் சேர்ந்த கலைஞர் ஒருவர். இந்த புகைப்படத்தை வெளியிட்டு அதோடு கூறப்படும் எந்த தகவலும் உண்மையானது அல்ல, இது ரப்பர் மற்றும் சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட பொம்மை. இந்த பொம்மை தற்போது விறபனைக்கும் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.