Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:16 IST)
மெக்சிகோ நாட்டில் ஒரு மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள குவானாஜூவாடோ மாகாணம் அபாசியோ எல் ஆல்டோ நகரில் பிரபலமான மதுபான விடுதி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் கடந்த புதன் கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஒரு மர்ம கும்பல் புகுந்து திடீரென்று துப்பாக்கியால் சுட்டது.

இதில், மதுபான விடுதி பணியாளர்கள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 2 பெண்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

இன்று ஒரே நாளில் 920 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

மெட்ரோ பணிகள் முடிந்தது.. சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments